
மண்டல் பரிந்துரை 17 ஆண்டுகள் ஆகியும்
ஏழு விழுக்காடுகூட நிரம்பவில்லையே!
சென்னை, ஆக. 31 மத்திய அரசில் 27 விழுக் காடு பணியிடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கவேண்டும் என்ற மண்டல் பரிந்துரை நடப்பிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகும் நிலை யில், அவர்கள் 7 விழுக் காடு இடங்களையே பெற்றுள்ளார்கள்.
மத்திய அரசுப் பணிப் பிரிவுகள் ஏ, பி, சி, டி எனப் பகுக்கப்பட்டுள் ளன. இந்தப் பணிகளில் சராசரியாக 6.87 விழுக் காடு இடங்கள் மட்டும் தான் இதர பிற்படுத்தப் பட்டவர்களைக் (ஓ.பி.சி.) கொண்டு நிரப்பப்பட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த உயிர் மருத்து வப் பொறியாளரான ஈ. முரளிதரன், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசிடம் இருந்து தகவல் கேட் டிருந்தார். 2009 ஆம் ஆண்டுவரைக்குமான புள்ளி விவரங்கள் கேட் டிருந்தார். ஆனால், 2008 ஜனவரி முதல் தேதிவரைக்குமான விவ ரங்கள்தான் சேகரிக்கப் பட்டிருப்பதாகக் கூறி அவற்றை மத்திய அரசு அனுப்பி வைத்தது.
மத்திய அரசில் பிற் படுத்தப்பட்டோர் பணி நியமனம்: (அட்ட வணை தனியே காண்க)
நேர்முகத் தேர்வின் மூலம் சிவில் பணி களுக்கு இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 1993 செப்டம் பர் 8 முதல் நடப்பிற்கு வந்தது.
ஆறு அமைச்சகங் கள் / துறைகளைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை என மத்திய அரசின் பணியாளர் துறை அமைச்சு தெரி வித்துள்ளது. ஆனால், அந்த ஆறு துறைகள் எவை எனக் குறிப்பிட வில்லை.
22 விழுக்காடு ஷெட்யூல்டு வகுப்புக்கு மத்திய அரசில் ஒதுக் கீடு. அதில் 17.45 விழுக் காடு நிரப்பப்பட்டிருக் கிறது. பழங்குடிகளுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீடு உண்டு. அதில் 6.83 விழுக்காடு நிரப்பப்பட் டுள்ளது.
ஆனால், இதர பிற் படுத்தப்பட்டவர்களுக் கான 27 விழுக்காடு ஒதுக்கீட்டில், சுமார் 7 விழுக்காடு மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின்மூலம் சமூகநீதி அளிப்பதில் மத்திய அரசு உரிய கவ னம் செலுத்தவில்லை.

No comments:
Post a Comment