Tuesday, December 21, 2010

பதில் உண்டா?

பொதுவாக கல்கி கிருஷ்ணமூர்த்தி அய்யரை சீர்திருத்தவாதி என்றுதான் அவர்கள் வட்டாரத்தில் சொல்லுவார்கள்.

இந்த வார கல்கி இதழ் (26.12.2010) கல்வெட்டுகள் என்ற பகுதியில் உண்மை யான ஆஸ்திகம்! என்ற தலைப்பில் கல்கியின் கருத் துகள் என்று கூறி ஒரு பக்கக் கட்டுரையை வெளியிட்டுள் ளது.

மேனாடுகளில் ஒரு காலத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவர்களையும், வேறு விதத்தில் தேவ தூஷணை செய்தவர்களையும் நெருப்பிட்டுக் கொளுத்தி னார்கள்; வேறுவித சித்திர வதைகளும் செய்தார்கள்.

ஆனால், இந்தியாவில் அம்மாதிரி என்றைக்கும் கிடையாது என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி சொன்ன தாக இவ்வார கல்கி வார இதழ் கூறுகிறது.

வரலாற்றை மய்யப் படுத்தி நாவல்கள் எழுது வதில், பிரசித்தி பெற்ற கல்கி கிருஷ்ணமூர்த்தி - இப்படி உண்மைக்கு முரணாக எழுதுகிறார் என்றால், இனி எந்தப் பார்ப்பானின் வார்த் தைகளை வாய்மையானது என்று கருதுவது?

எண்ணாயிரம் சமணர் களைக் கழுவில் ஏற்றிக் கொன்றது எந்த மதம்? இந்து மதத்தின் உயிர்க் கொலை களையும், வருணாசிரமப் போக்குகளையும், கடவுள் களையும் மறுத்துக் கருத்துப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதற்காகத்தானே இந்தக் கொடுமை?

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்

திண்ணகத் திருவால வாயருள்

பெண்ணகத் தெழில் சாக்கிய பேய்மண்

பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே

என்றவர்- தேவாரம் பாடிய திருஞான சம்பந்தன் அல்லவா!

மதுரையில் குடிகொண் டிருக்கும் எங்கள் சிவனே, பவுத்தர், சமணர் வீட்டு அழகிய பெண்களின் கற்பை அழிக்க எங்களுக்கு அருள் புரிவாயாக என்று வேண்டிக் கொண்டானே- இதற்கு என்ன பதில்?

வேத வேள்வியை

நிந்தனை செய்துழல்

ஆதமில்லி யமணோடு தேரரை

வாதில் வென்றழிக்க

திருவள்ளமே!

பவுத்தர்களையும், சமணர்களையும் வாதத்தில் வெல்ல கடவுள் அருள்புரிய வேண்டுமாம்.

அப்படியென்றால் திரு ஞான சம்பந்தன்களுக்குச் சக்தியில்லை; சரக்கும் இல்லை. கடவுள்தான் அருள் புரிய வேண்டும் என்றால், பக்தனின் யோக்கியதை என்ன? கடவுளின் யோக்கி யதையும் தான் என்ன?

சமணர்களையும், பவுத் தர்களையும் கண்ட மாத் திரத்திலேயே அவர்களின் தலைகளை அறுக்கவேண் டும் என்று அரங்கமா நக ருள்ளானை வேண்டிப் பாடியுள்ளாரே தொண்டரடிப் பொடியாழ்வார்.

(நாலாயிரத் திவ்விய பிரபந்தம்- பாடல் எண் 879)

அரசர்களைக் கையில் போட்டுக்கொண்டு பார்ப்ப னர்கள், சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொல்லு கின்ற கல்வெட்டுகளை திருவத்திபுரம் கோயிலுக்குள் இன்றும் பார்க்கலாமே!

கடவுளோடு அன்றாடம் குடும்பம் நடத்துவது போலக் கசிந்துருகும் கல்கிகள் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல முன்வருமா?

No comments: